"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, August 31, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - புத்தகமாக

அனைவருக்கும் வணக்கம்,

“பூக்கள் விற்பனைக்கல்ல” நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளது. இவ்வினிய தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி நட்புகளே! கடவுளுக்கு முதற்கண் நன்றி! எம்ப்ரியாலாஜி துறை எந்தளவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமாக உள்ளதோ, அதற்குச் சரியாக வியாபார நோக்கும், சிலரின் குற்றங்குறைகளும் இருக்கவே செய்வதால் - இத்துறையில் நிகழும் அர்ப்பணிப்பு, அத்துமீறல்களை முழுநீள நாவலாக எழுத முடிந்தால் நன்றாக இருக்குமே என்கிற கனவு நனவாக இயன்றது நிச்சயம் இறைவனின் அருளே!

Wednesday, August 26, 2020

சூரிய வம்சம்

இந்த நூல் வெளியான நாளில் இருந்தே மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தது, இப்போது மின்னூலாக வாசிக்க இயன்றது எனக்கு அமைந்த பாக்கியம் என்றே கருதுகிறேன். எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி தன்னுடைய நினைவலைகளை "சூரிய வம்சம்" என்கிற இரு தொகுதிகளாக பதிவு செய்திருக்கிறார்.

Wednesday, August 19, 2020

எழுத்து என்ன தரும்?

சில சமயம், 'எதற்காக எழுதுகிறாய்?' என்று என்னைத் தெரிந்த சில நட்புகளும், உறவுகளும் கேட்பதுண்டு. சிலர் அக்கறையுடனும், சிலர் ஆர்வத்துடனும், 'வேலை வெட்டியை கவனிக்காம இது ஏதோ செய்து கொண்டிருக்கிறதே!?' என்கிற என் மேலான உண்மையான அன்பு கொண்டும், 'இவளுக்கு வேற வேலை இல்ல...' என்று கிண்டலாகவும் விதவிதமான தொனிகளில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டது/ள்வது உண்டு.