"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label ஹேமா. Show all posts
Showing posts with label ஹேமா. Show all posts

Wednesday, March 4, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - 'இது தமிழ்' தளத்தில்

'இது தமிழ்' இணைய தளத்தில் வெளியான 'பூக்கள் விற்பனைக்கல்ல' நாவலுக்கான விமர்சனம். வாசித்து விமர்சித்த நண்பர். திரு. நந்தகுமார் நாகராஜனுக்கு நன்றிகள்!

https://ithutamil.com/pookkal-virpanaikkalla-novel-review/

Monday, January 20, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (5)

Very very constructive review from the author of 'யூனிட் 109', 'அன்று வந்ததும் அதே நிலா', 'கடாரம்' - எழுத்தாளர் மாயா.

டிசம்பர் முதல் தேதியில் அவர் பகிர்ந்த விமர்சனத்தை இப்போது எடுத்துப் போடுவதெல்லாம் - என்னுடைய டக்-ஐ நினைத்தால் எனக்கே கண்ணு வேர்க்குது. ஒவ்வொருமுறை நினைவு வரும்போதும் மொபைலில் குழுமத்திற்குள் தேடி காபி செய்ய முயன்று.... பப்பரக்கா என swipe செய்யும் என் திறமையால் எங்கெங்கோ போகஸ் நழுவி ஓடி... மடிக்கணினியில் காபி செய்து சேகரித்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடனே... Better late than never- ஆக இன்று என் டைம்லைனில் பத்திரம் செய்து விட்டேன். Many many thanks for your read and the valuable feedback Malar ! Malarvizhi Baskaran 🙏🙏

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (4)

பூக்கள் விற்பனைக்கல்ல - எழுத்தாளர் தோழி ஆர்த்தியின் பார்வையில். ஆர்த்தி குறிப்பிட்டு இருப்பது போல செயற்கை முறைகள் மனதிற்கு சங்கடம் தருபவை தான், எனினும் இன்று பல குடும்பங்களுக்கு பல தாய்மார்களுக்கு வரமாக உள்ளதை நாம் மறுக்க முடியாது. ஆழ்ந்த வாசிப்பும் தீர்க்கமான விமர்சனமும். - இவருடைய விமர்சனம் பொங்கல் அன்று கிடைக்க எனக்குக் கிடைத்த பொங்கல் பரிசாகவே நினைத்துக் கொண்டேன் - மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஆர்த்தி. With Budding Novels AR

Wednesday, January 1, 2020

ஆயிரம் ஜன்னல் மனசு - விமர்சனங்கள்

‘ஆயிரம் ஜன்னல் மனசு’ நாவலுக்கான விமர்சனங்களின் தொகுப்பு இது. நாவல் குறித்த தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து, குறை நிறைகளைச் சுட்டி உதவும் சக எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன்! கதைக்கான விமர்சனங்களை இப்படி தொகுத்து வைப்பது நரையெய்தி கிழப்பருவம் ஏகும் ஓர் நாளில் புன்னகையுடன் புரட்டிப் பார்ப்பதற்காகவே. 'இப்பயே நரை வந்துடுச்சே'ங்கிற உண்மையைச் சொல்லி யாரும் என் சின்ன இதயத்தை பழுதாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு...

Thursday, September 26, 2019

கண்ணாடிக் கோணங்கள்

கண்ணாடிக் கோணங்கள் என்னும் சிறுகதை செப்'2019 தென்றல் இதழில் பிரசுரமாகி உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்

காதல் கஃபே - வாசகர் பார்வைகளும் சில பின்னூட்டங்களும்

காதல் கஃபே - வாசகர் பார்வைகளும் சில பின்னூட்டங்களும்

Sunday, September 15, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு & காதல் கஃபே

ஹாய் மக்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Hope everyone is doing well and everything is going on good. அவ்வப்போது எட்டிப் பார்ப்பதாலும், அடிக்கடி காணாமல் போவதாலும் என் பெயர் உங்கள் நினைவடுக்குகளில் இருந்து சற்றே அவுட் ஆப் போகஸ் ஆகியிருக்கலாம். சில பல அலைச்சல்களில் நான் முகநூல் வருவதே மிகவும் குறைந்து விட்டது. அன்றாட வேலைகளிலே கவனம் செல்வதில் எழுத்து வேலைகளிலும் சிறு தேக்கம். நினைப்பதை தாமதமின்றி பதிய என ஆரம்பித்த வலைப்பதிவிலும் பதிவுகள் இட்டு வெகு நாட்களாகின்றன. கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவ்வப்போதேனும் சில பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். Though I procrastinate  it everyday, hope I could streamline slowly and with no doubt I trust you guys will understand this gap.
BTW, “ஆயிரம் ஜன்னல் மனசு” என்னும் புத்தம் புதிய நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. Thanks to the Almighty for this moment! 

Wednesday, May 15, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி


ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரம் கழிந்தப் பிறகும் கூடக் குளிரும் பனியும் இங்கே குறையவில்லை. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன் வெயில் ஆசையைக் காட்டிவிட்டு பின்னாடியே ஊதல் காற்றை அனுப்பி வைக்க இந்த வருட வானிலை ரொம்பவே போக்குக் காட்டுகிறது.

சோறு


சமீபத்தில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழையும்போதே எண்ணற்ற ஒளி விளக்குகள் ஜொலிக்க, தேவலோகம் போல மிளிர்ந்தது திருமண மண்டபம். வாசலிலேயே இரு வீட்டு பெற்றோர்களும் நின்று இருகரம் கூப்பி விருந்தினர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் காலமெல்லாம் மலையேறிப் போயிருக்க, ஈவன்ட் மேனேஜ்மென்ட்டின் ஒரே மாதிரி சீருடை அணிந்த பெண்கள் செதுக்கி வைத்த புன்னகையுடன் பன்னீர் தெளித்து வரவேற்றார்கள்.

Saturday, April 20, 2019

இலையுதிர்காலம்


“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

Sunday, April 14, 2019

குவிகம் சிறுகதை போட்டி

குவிகம் சிறுகதை போட்டியை செம்மையாக நடத்திய குவிகம் இலக்கிய வாசல் குழுமத்தினருக்கும், திரு. கிருபானந்தன் ஐயா அவர்களுக்கும், அன்பார்ந்த நடுவர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட இத்தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கான ஆதர்ச முன்னோடியான திருமதி. வித்யா சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!

Friday, March 1, 2019

பூவிதழ் தூரிகை - அமேசான் கிண்டில்

வணக்கம்,

பூவிதழ் தூரிகை தற்போது அமேசான் கிண்டிலில்.  வாசிக்க விழையும் நண்பர்களுக்காக கீழ்கண்ட கிண்டில் இணைப்புகளை கொடுத்துள்ளேன். வாசித்துவிட்டு இக்கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி 😊😊😊🙏🙏🙏!

Saturday, January 12, 2019

பூவிதழ் தூரிகை

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எனது அடுத்த நாவலான ‘பூவிதழ் தூரிகை’ புத்தகமாக வண்ணம் கொண்டுள்ள சந்தோசத் தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 

Tuesday, November 27, 2018

காதல் கஃபே

நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு நல்ல விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். "காதல் கஃபே" - எனது புதிய நாவல் அமேசானில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Saturday, October 27, 2018

ஈரம் - சிறுகதைத் தொகுப்பு

நண்பர்களுக்கு,

அமேசான் கிண்டலில் ஈரம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பல்வேறு இதழ்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்களில் வெளிவந்த/பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் சில கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்விடம் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 22, 2018

மலரினும் மெல்லிய - சில பார்வைகள்

வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன.  வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. எந்தப் பதிவும் இல்லை என்றாலும் தவறாமல் இங்கு வந்து எட்டிப் பார்த்து செல்லும் நண்பர்களுக்கு என் அன்பும், நன்றியும்!

Tuesday, June 19, 2018

மலரினும் மெல்லிய

அனைவருக்கும் வணக்கம், 

'மலரினும் மெல்லிய’ எனது அடுத்த நாவல் புத்தகமாக மலர்ந்துள்ள இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

Thursday, June 14, 2018

Monday, May 28, 2018

சோறு

செந்தூரம் வைகாசி இதழில் இடம்பெற்ற உணவு பற்றிய கட்டுரையை கீழே இணைத்துள்ளேன். செந்தூரம் இதழில் இடம்பெற்ற சுட்டி இங்கே : சோறு