"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, October 30, 2019

பூக்கள் விற்பனைக்கல்ல

வணக்கம், நண்பர்களுடன் இந்த இனிய செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். எமது புத்தம் புதிய நாவல் ஒன்று அமேசான் கிண்டிலில் இன்று வெளியாகிறது. பூக்கள் விற்பனைக்கல்ல - மருத்துவப் பின்னணி கொண்ட சுவையான நாவல். வித்தியாசமான கதைக்களன், என்னளவில் சவாலான முயற்சியும்கூட.

Friday, September 27, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு - வாசகர் பார்வை

எழுதும்போது நமக்கு தோன்றும் உணர்வுகளை வாசிக்கும்போது புரிந்து கொள்ள இயன்றால் தான் அந்த எழுத்து சரியாக போய் சேர்ந்ததாக கொள்ளலாம். உங்கள் மதிப்புரை மூலம் அந்த உணர்வுகள் இயல்பாக கடந்திருப்பது அறிந்து  நிறைவாக உள்ளது.

Thursday, September 26, 2019

கண்ணாடிக் கோணங்கள்

கண்ணாடிக் கோணங்கள் என்னும் சிறுகதை செப்'2019 தென்றல் இதழில் பிரசுரமாகி உள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துச் சொல்லுங்கள்.

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்

பூவிதழ் தூரிகை - சில பார்வைகளும் பின்னூட்டங்களும்

காதல் கஃபே - வாசகர் பார்வைகளும் சில பின்னூட்டங்களும்

காதல் கஃபே - வாசகர் பார்வைகளும் சில பின்னூட்டங்களும்

Sunday, September 15, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு & காதல் கஃபே

ஹாய் மக்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Hope everyone is doing well and everything is going on good. அவ்வப்போது எட்டிப் பார்ப்பதாலும், அடிக்கடி காணாமல் போவதாலும் என் பெயர் உங்கள் நினைவடுக்குகளில் இருந்து சற்றே அவுட் ஆப் போகஸ் ஆகியிருக்கலாம். சில பல அலைச்சல்களில் நான் முகநூல் வருவதே மிகவும் குறைந்து விட்டது. அன்றாட வேலைகளிலே கவனம் செல்வதில் எழுத்து வேலைகளிலும் சிறு தேக்கம். நினைப்பதை தாமதமின்றி பதிய என ஆரம்பித்த வலைப்பதிவிலும் பதிவுகள் இட்டு வெகு நாட்களாகின்றன. கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவ்வப்போதேனும் சில பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். Though I procrastinate  it everyday, hope I could streamline slowly and with no doubt I trust you guys will understand this gap.
BTW, “ஆயிரம் ஜன்னல் மனசு” என்னும் புத்தம் புதிய நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. Thanks to the Almighty for this moment! 

Wednesday, May 15, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி


ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரம் கழிந்தப் பிறகும் கூடக் குளிரும் பனியும் இங்கே குறையவில்லை. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன் வெயில் ஆசையைக் காட்டிவிட்டு பின்னாடியே ஊதல் காற்றை அனுப்பி வைக்க இந்த வருட வானிலை ரொம்பவே போக்குக் காட்டுகிறது.

சோறு


சமீபத்தில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழையும்போதே எண்ணற்ற ஒளி விளக்குகள் ஜொலிக்க, தேவலோகம் போல மிளிர்ந்தது திருமண மண்டபம். வாசலிலேயே இரு வீட்டு பெற்றோர்களும் நின்று இருகரம் கூப்பி விருந்தினர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் காலமெல்லாம் மலையேறிப் போயிருக்க, ஈவன்ட் மேனேஜ்மென்ட்டின் ஒரே மாதிரி சீருடை அணிந்த பெண்கள் செதுக்கி வைத்த புன்னகையுடன் பன்னீர் தெளித்து வரவேற்றார்கள்.

Saturday, April 20, 2019

இலையுதிர்காலம்


“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும் ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...

உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.

Sunday, April 14, 2019

அமிழ்தம் மின்னிதழ் - கேள்வி பதில்கள்

அமிழ்தம் தை மாத மின்னிதழில் வெளியான "ஒரே கேள்வி, வெவ்வேறு பதில்கள்" பகுதியில் இடம்பெற்ற எனது பதில்களுடன் கூடிய மின்னிதழின் திரைச்சொட்டுகள் கீழே.

இளம் எழுத்தாளரான என்னையும் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பினை அளித்து கௌரவப்படுத்திய அமிழ்தம் மின்னிதழ் குழுமத்தினருக்கும், சகோதரி எழுத்தாளர் திருமதி. ஷெண்பா அவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்!

குவிகம் சிறுகதை போட்டி

குவிகம் சிறுகதை போட்டியை செம்மையாக நடத்திய குவிகம் இலக்கிய வாசல் குழுமத்தினருக்கும், திரு. கிருபானந்தன் ஐயா அவர்களுக்கும், அன்பார்ந்த நடுவர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்களுக்கும், புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட இத்தலைமுறை பெண் எழுத்தாளர்களுக்கான ஆதர்ச முன்னோடியான திருமதி. வித்யா சுப்பிரமணியம் அவர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்!

Sunday, March 17, 2019

அமிழ்தம் மின்னிதழ்

அமிழ்தம் மின்னிதழ் 'ஒரே கேள்வி, வெவ்வேறு பதில்கள்' பகுதியில் கேள்விகளும், எனது பதில்களும். அமிழ்தம் ஆசிரியர் குழுமத்தினருக்கு என் நன்றிகள்!

எனது கேள்விக்கு விரிவாக பதில் எழுதிக் கொடுத்துள்ள எழுத்தாளர். திருமதி. ஷெண்பா பாலச்சந்திரன் அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!

அமிழ்தம் தை - மாசி இதழ்

Friday, March 1, 2019

பூவிதழ் தூரிகை - அமேசான் கிண்டில்

வணக்கம்,

பூவிதழ் தூரிகை தற்போது அமேசான் கிண்டிலில்.  வாசிக்க விழையும் நண்பர்களுக்காக கீழ்கண்ட கிண்டில் இணைப்புகளை கொடுத்துள்ளேன். வாசித்துவிட்டு இக்கதைப் பற்றிய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி 😊😊😊🙏🙏🙏!

Saturday, January 12, 2019

பூவிதழ் தூரிகை

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எனது அடுத்த நாவலான ‘பூவிதழ் தூரிகை’ புத்தகமாக வண்ணம் கொண்டுள்ள சந்தோசத் தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.