"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, December 27, 2021

மனங்கொத்திப் பறவை - விமர்சனங்கள்

மனங்கொத்திப் பறவை நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்கள் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

Sunday, November 21, 2021

மனங்கொத்திப் பறவை

அனைவருக்கும் வணக்கம்!

‘மனங்கொத்திப் பறவை ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 
 
தன் வேட்கைகளுக்கும் குடும்ப கடமைகளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமையளிப்பது என்று புரியாமல் அல்லாடும் எண்ணற்ற பெண்களில் ஒருத்தி தான் இந்நாவலின் நாயகியான கயலும். அவளது தேடலுக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே நழுவி செல்லும் வாழ்க்கையைப் பறவை பார்வையாக நோக்கும் சிறு அனுபவமே ‘மனங்கொத்திப் பறவை’யாக இருக்கும். இந்நாவலை வாசித்து உங்களது மேலான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Thursday, October 14, 2021

‘கடல் சேரும் விண்மீன்கள்' - விமர்சனங்கள்

‘கடல் சேரும் விண்மீன்கள்'  நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

https://www.amazon.in/dp/B09FKQ8TYT 

https://www.amazon.com/dp/B09FKQ8TYT

Monday, September 6, 2021

கடல் சேரும் விண்மீன்கள் - புதிய நாவல் கிண்டிலில்

டியர் நட்புகளுக்கு,


‘கடல் சேரும் விண்மீன்கள்' புதிய நாவல் ஒன்றை கிண்டிலில் பதிந்திருக்கிறேன். சிறிய கதை தான் இது. பதினாறு அத்தியாயங்கள் மட்டுமே கொண்டது. விருப்பத்திற்கும்(Passion) அழுத்தத்திற்கும்(obsession) இடையே இருப்பது நூலிழை அளவு இடைவெளி தான் என்று சொல்லும் இக்கதை உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். வாசித்து உங்கள் மேலான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

 https://www.amazon.in/dp/B09FKQ8TYT 

https://www.amazon.com/dp/B09FKQ8TYT

Saturday, July 10, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ - புத்தக வெளியீடு

அன்பு நண்பர்களுக்கு,

"நினைவெல்லாம் செண்பகப்பூ" நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகத்தினருக்கும், ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

Thursday, July 8, 2021

எழுத்தாளர் கேள்வி பதில்கள்

முகநூல் குழு ஒன்றில் இடம்பெற்ற 'எழுத்தாளர் கேள்வி பதில்' பகுதியில் கேள்விகளும் எனது பதில்களும்.

Saturday, June 12, 2021

காதல் கஃபே ஆடியோ நாவல்

 நண்பர்களுக்கு,

‘காதல் கஃபே’ நாவல் ஆடியோ புத்தகமாக வெளிவந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதைக்கு புஸ்தகா & கூகிள்ப்ளேவில் கேட்டு மகிழலாம். விரைவில் Audible மற்றும் storytel பிளாட்பார்ம்களிலும் வெளியாகும்.  
https://play.google.com/store/audiobooks/details?id=AQAAAEA8MCRwCM

https://www.pustaka.co.in/home/audiobooks/tamil/kaadhal-cafe-audio

Thursday, June 10, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(3)

நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(2)

நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

------------------------------------------------------------------------

நினைவெல்லாம் செண்பகப்பூ - விமர்சனங்கள்(1)

நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

தூரங்கள் நகர்கின்றன - விமர்சனங்கள்

'தூரங்கள் நகர்கின்றன' - நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

Monday, May 31, 2021

நினைவெல்லாம் செண்பகப்பூ

அனைவருக்கும் வணக்கம்! 

'நினைவெல்லாம் செண்பகப்பூ’ - புதிய நாவல் இப்போது கிண்டிலில். அதிகம் பேசா பொருளைப் பேசவிருக்கும் கதை கரு இது. வாசித்து உங்களது மேலான விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

நன்றிகளுடன்!
ஹேமா ஜெய்
https://www.amazon.in/dp/B095NBLSKV

Sunday, April 25, 2021

தூரங்கள் நகர்கின்றன - கிண்டிலில்

அனைவருக்கும் வணக்கம்,

தூரங்கள் நகர்கின்றன - புதிய நாவல் இப்போது கிண்டிலில். 
 
கண்மணியில் வெளியான நாவல் இது. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே. நன்றி!

Sunday, April 11, 2021

கண்மணி நாவல்

மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது. 

Saturday, April 10, 2021

Friday, March 26, 2021

கல்கியில் வெளியாகியுள்ள சிறுகதை

இந்த வார கல்கியில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்துள்ளது. இறைவனுக்கு நன்றி! அழகான ஓவியங்களுடன் நேர்த்தியான வடிவமைப்பில் நம் கதையை நாமே பார்ப்பது ஒரு பிரத்யேக உணர்வு!

Friday, March 5, 2021

'அரசியல் பழகு' - சிறுகதை

 நண்பர்களுக்கு, வணக்கம்!

மகளிர் சிறப்பிதழான இந்த மாத தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது.
'அரசியல் பழகு' - அலுவலகங்களில், நட்பு வட்டங்களில், முகநூலில், வாட்ஸ்அப் குழுக்களில் என இந்த உலகில் அரசியல் இல்லாத இடமே இல்லை. காற்று இல்லாத இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது அரசியலே. ஏன் வெளியே தேட வேண்டும்? நம் குடும்ப உறவுகளில் இல்லாத அரசியலா? நிறைய நேரம் அதன் நுட்பங்களை புரிந்து கொள்ளவே நேரம் எடுக்கும். புரியும்போதோ இது தெரியாமல் இத்தனை நாள் இருந்திருக்கிறாமே என்று மலைப்பாக இருக்கும்.

Sunday, February 28, 2021

இதழ் வரி கவிதை விமர்சனங்கள்

    இதழ் வரி கவிதை நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏!

Monday, February 1, 2021

சிறுகதை - மங்கையர் மலரில்

இந்த மாத மங்கையர் மலர் இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி உள்ளது. 'சிற்றெறும்புகளின் காலம்' என்னும் இச்சிறுகதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கீர்த்தி சிறிதோ, பெரிதோ  எல்லோருக்கும் அவரவர்க்கான காலம் உண்டு என்று சொல்கிற கதைக்கரு.