"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, December 18, 2022

வாசகர் கடிதம் - பனி இரவும் தனி நிலவும்

ஆசைக்கு எழுதி பார்த்தாயிற்று, இதோடு போதும் என்ற எண்ணத்துடன் எழுதிய மூன்றாவது நாவல் ‘பனி இரவும் தனி நிலவும்’. அதனாலேயே இதன் பக்கங்கள் அதிகம். அறிமுக எழுத்துக்குரிய போதாமைகளையும் கடந்து நிறைய வாசகர்களையும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்த கதை. நேற்று இந்நாவல் குறித்து மின்னஞ்சலில் வந்திருந்த கடிதம் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. என்ன சொல்ல, நன்றியைத் தவிர. நன்றி தம்பி! 🙏🙏




Monday, December 5, 2022

பெண்மணி நாவல்

அன்புள்ள வாசகர்களுக்கு, 

இந்த மாத பெண்மணியில் என்னுடைய நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'Rediscovering herself' வரிசையில் எழுதியுள்ள இரண்டாவது கதை இது. இக்கதையின் நாயகியை நிறைய பேரால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இது நம் ஒவ்வொருவருடைய கதையும் தான். இந்நாவலுக்கு நான் ஒரிஜினலாக வைத்த பெயரைக் கதையின் இறுதியில் கண்டு கொள்ளலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்து விட்டுச் சொல்லுங்கள். நன்றி!





Saturday, December 3, 2022

சகி - விமர்சனங்கள் (3)

Ms. Sharmila Natarajan - 26 Jan 2023

Hi Hema, I read “Saki” yesterday. Every sentence in the book is gold! It moved me. Your fine understanding of sensitive emotions of a woman made me think! It is definitely a turning point of my thoughts for future regards kids, their life and how our life will be few years down the lane. Bharathi is such a strong character! I read a few parts again and again. It’s a soothing and feel good novel. Very heavy emotions but that is the truth of life as I look back how much I have come so far. Living like Bharathi for the sake of kids and still having no expectations on kids is just so poise and and deeply moving. An eye-opener for me! If someone would have told this to me, I would have argued back. The way you narrated the incidents and the way you unfolded the thoughts behind it was so natural and agreeable! My words don’t really justify the way you had put this story together! I am sure I will read this story many times! Deeply moving! Such strong writing! More power to you Hema! Keep writing!



























Reviewed in India on 17 September 2022
Verified Purchase
Woooow what to say Hema Jay !
This story is made up of words of precious pearls!!!
First, hats off to take such a delicate plot of welcoming two SAGI’S marriage n justification ( ‘justification’, is a wrong word here…..what is there to justify? )
Am awestruck with ur selective usages of words to implement this plot n land it so smoothly n beautifully….
What a choice of words !…
Ur words made me wear Bharathi’s shoes n let me feel her n live her life n made me decide her life tooo….!!!!
What a mature writing!!!
It’s brilliant of u n unimaginable for me,that how u could pen Bharathi’s feelings n emotions with 2twin kids , of a divorcee due to infidelity-that too by her own friend, her naïveté!!!!!
Totally unbelievable !!!
Society needs this change of mind…
Her grandson’s wishes!!! Semma…brilliant way to hit nail on this society!!!!!!!!!
Awesome! Semma! Dunno how u conceived n perceived the life of single parents after 50 so sharply n minutely….
Very brilliant writing n achieved what u aimed of!!!
Uncountable claps!!!

சகி - விமர்சனங்கள்(2)

சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 


Sep 5 2022 Ms. Lakshmi Kalyan


Hi hema


Just read your சகி on kindle. Amazing Hema. Very good plot.  Verrry relevant for today. You have captured the feelings of people nearing or on the other side of 50. Seriously it is a very tricky age as you slowly get into the empty nest syndrome and as your kids don’t depend much on u you suddenly have so much time and don’t know what to do with life

Enjoyed it thoroughly. Especially your take on the IMAGE our society has created for the word AMMA. Very true. Once again a good read which touches your soul. 

God Bless you dear, keep writing. …..

Sep 16 2022 - Ms. Selvarani

சகி.
எப்போ படிக்கலாம் என காத்து இருந்தேன்.
படிக்க படிக்க காரணமே இல்லாது கண் கலங்கியது. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு கருத்து நமக்கு இருக்கும். மாறிக் கொண்டே இருக்கும் நமது மனம். என் இப்போதைய மன நிலையில் இந்த கதை அத்தனை பிடித்து இருக்கு.
தனிமை என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனை. தேவைப் படும் போது கிடைப்பதில்லை. கிடைக்கும் போது நம் மனம் வேறு எதையோ எதிர் பார்க்கிறது. முதுமையின் வயது எது?நாற்பதா? ஐம்பதா? அதற்கு மேலா? அதற்கு பின் வாழ்க்கை இல்லையா? தியாக உள்ளத்துடன் தனிமையில் இருந்து இறப்பு வரை வாழ வேண்டுமா?
அம்மாவுக்கு இன்னொரு vவாழ்க்கை அமைத்து கொடுக்கும் செய்திகள் இப்போது நாம் பரவலாகப் பார்க்கிறோம். முதியோர் இல்லங்களில் சேரும் பலர் தங்கள் இணையை தேர்ந்து எடுப்பதையும் பார்க்கிறோம். அந்த செய்திகளில் வரும் பின்னூட்டங்ளையும் கவனிக்கிறோம். எத்தனை வக்கிரங்கள்? இத்தனை அசிங்கங்களை சுமந்து தான் இந்த தலைமுறை திரிகிறார்களா? அடுத்த தலைமறை வாழ்த்து சொல்வது ஆறுதல். பாரதி ராம் இருவரும் மனக் கண்ணில் வந்து போகிறார்கள். பாரதியின் மன நிலையும் அவளின் எண்ணங்களும் அப்படியே அவளை கட்டி பிடிச்சுக்கணும் போலிருக்கு.

காலம் சரியான நேரத்தில் சரியான மனிதர்களை அறிமுகப்படுத்துவதில்லை.எப்போதாவது சரியான மனிதர்களை சந்திக்க நேர்ந்தால் அது வரம்.

Sep 17 2022 Ms. Mano Ramesh

"மனிதனுக்கு எத்தனை வயது தான் ஆகட்டும். தன் கண்காணிப்பு வளையத்தில் இருந்து அவனை வெளியேற்றுவதே இல்லை இந்தச் சமூகம்." சகி - ஹேமா ஜெய்.
இந்த சொசைட்டி ஒரு டெம்ப்ளட் வெச்சு இருக்கு அதை கொஞ்சம் அங்க இங்க மாத்தி பண்றவங்களையும் கேள்வி கேட்டு peer pressure பண்ணி காலி பண்ணிடுவாங்கன்னு என் மானேஜர் ஒருத்தங்க பேசும் போது சொல்லுவாங்க.
அப்படி சமூகம் கட்டமைச்சு இருக்க டெம்ப்ளட்ல தெண்டமான பல விஷயங்களை பத்தி பேசியிருக்கு சகி. இது பாரதிக்கு மட்டும் இல்ல, இந்த சமூகத்தின் தேவையில்லாத கேள்விகளை எதிர்கொள்ளும் எல்லாருக்குமானது சகி.
அந்த நாலு பேர் யாரு, நான் கேக்கறது உன்னோட முடிவு என்னனு தான். இது வெறும் டிக்ளரேஷன் மட்டும் தான்,அவங்களுக்கும் இது not an easy process னு சொல்றதுன்னு வழி நெடுக்க அழகான நெறய விஷயங்கள்.
என் கிட்ட சந்தோஷத்தை பகிர்ந்துக்க கூட யாரும் ரெடி இல்ல. எனக்கு வலிக்கும்னு நான் சொல்ல கூடாதா இப்படி பாரதி கேக்கும் சொல்லும் பல விஷயங்கள் வயசு வித்தியாசம் இல்லாம இங்க நெறய பேருக்கு இருக்க கேள்விகள் தான்.
கமலி அண்ட் ராகவனும் ஸ்கோர்ட் வெல். Thank you for such a wonderful travel and experience Hema Jay .
சொல் அல்ல செயல் னு ஒரு புக்ல , அவர் போன பிறகு தான் எனக்குன்னு நேரம் கிடைச்சது, அதான் ஊர் சுத்தறேன்னு அந்த அம்மா சொன்னதை அப்படியே உடனே ஏத்துக்க என் இந்திய ஆண் மனம் தயாரா இருக்கலன்னு ஒரு லைன் வரும். அப்படி உடனே எல்லாம் பாரதி அண்ட் ராமை எல்லாரும் சரின்னும் கிரேட்னும் எடுத்துக்கணும்னு இல்ல. கவின், அருண் அருணான்னு எல்லா விதமான ரியாக்ஷன்களும் இருக்கும் தான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது.

சகி - விமர்சனங்கள் (1)

சகி நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து கருத்துக்களைப் பகிரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏! 

Sep 5 2022 - Ms. Alamu Palaniappan

Hema Jay's "சகி"

முகவுரை கொஞ்சம் யோசிக்க வைத்ததோடு ஆர்வத்தையும் தூண்டியது. வாசிக்க ஆரம்பித்த நொடியிலிருந்து ஆரம்பமாயிற்று அழகான , எந்த இடத்திலும் முகம் கோணச் செய்யாத பயணம் கதை முழுவதும்.
இன்றையச் சூழலில் மிக மிகத் தேவையான ஒரு மாற்றம். சாத்தியமா? என்ற கேள்வி தோன்றவே தேவையில்லாத ஒன்று. " ஆனால் அது எவ்வாறு சாத்தியமாகக்கூடும் என்பதையும் , எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டால் சாத்தியமாகும் என்பதையும் இதை விட அழகாகக் காட்ட இயலாது என்றே தோன்றுகிறது.
" விசாலமான பார்வை " ? இதற்கான பதிலே "சகி".
Yes, it is a delicate plot .... but u made it a great hit.

Congratulations and Best Wishes Hema.

Friday, December 2, 2022

A quick share

Hi, just thought of sharing this observation, probably for a long time - கதைகளில் ஆணின் போதாமைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டினால் நன்று. புரட்சி. பாராட்டு. சரியா சொன்னீங்க. இப்படித் தான் நிறைய பேர் இருக்காங்க. அதுவே பெண் என்றால் ம்ஹும்… நோ. அது எப்படி ஒரு பெண்ணைச் சொல்லலாம்? Regressive.

ஆண் எனில் subjective ஆக உள்ள கதாபாத்திரங்கள், பெண் என்றால் மட்டும் generalize ஆக்கி பெண்ணினத்துக்கே விடுத்த சவால் போல பார்ப்பது ஏன் ???? 

Monday, November 21, 2022

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில்

டியர் மக்களே,

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில். கடந்த ஜூன் 2022-ல் புத்தகமாக வெளிவந்தது இப்போது கிண்டில் பதிப்பாக உங்கள் முன்பு. Do read, review and share a word if you like this story.


Friday, November 4, 2022

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில்

அப்பாவின் நிழல் - சிறுகதை - இந்த மாத (நவம்பர் 2022) பெண்மணி இதழில் மீள் பிரசுரமாகி உள்ளது. வாசிக்க வாய்ப்புள்ளவர்கள் படித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.🙂

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022

சிற்றெறும்புகளின் காலம் - சிறுகதை - பெண்மணி இதழ் ஜனவரி - 2022 ல் மீள் பிரசுரமாகி இருந்தது.

இது மங்கையர் மலரில் பரிசு பெற்று 2020’ல் வெளியான சிறுகதை.
(why now? Got the pictures only now 😃😃😃)
#shortstory #மீள் பிரசுரம்

Friday, September 23, 2022

உங்களுடன் ஒரு பகிர்வு

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், 

உங்களுடன் ஒரு சிறு பகிர்வு!

சென்ற வாரத்தில் ஒரு தோழி இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். மனங்கொத்திப் பறவை என்ற தலைப்புடன் வந்த கடிதம் என்பதால் 'மனங்கொத்திப் பறவை'க்கான விமர்சனம் என்றே நினைத்துப் பிரித்தேன். ஆனால், கடைசியாக அவர் குறிப்பிட்டிருந்தது...!!!

சில கடிதங்கள் நம்மை நெகிழ வைக்கும், கண் கலங்க வைக்கும்.  வீட்டில் எல்லோரிடமும் காட்டி பெரிதாக அளந்து செல்ப் டப்பா அடிக்க வைக்கும். ஆனால் இந்தக் கடிதம் மேற்சொன்ன எல்லா உணர்வுகளையும் மீறி என்னை பேச்சற்று இருக்கச் செய்தது.

Wednesday, September 7, 2022

தேவியின் கண்மணி நாவல் போட்டி

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

தேவியின் கண்மணி நாவல் போட்டியில் என்னுடைய நாவலான ‘யாழினிது’ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எங்கும் நிறை பேரருளின் கருணைக்கு நன்றி!

இந்தக் கதையில் சூட்சமமாக இடம்பெற்ற, வாழ்க்கையைத் துய்த்து வாழ்ந்த என் அலுவலக நண்பர் பிரையனை இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்கிறேன். அவரோ, அவருடைய வாழ்க்கையோ இந்நாவலில் இல்லை. எனினும் அவருடைய விடாமுயற்சியின் சுவடுகள் எத்தனை கனமாக என்னுள் ஊடுருவியுள்ளது என்பதை இக்கதையை எழுதும்போது தான் நானும் உணர்ந்தேன். இப்போது நீங்கள் இருந்திருந்தால் உங்களிடம் தான் இதை முதலில் சொல்லியிருப்பேன் பிரையன். இது என்ன போட்டி என்று ஒரு மணி நேரம் நகர விடாமல் நீங்களும் என்னை துளைத்திருந்திருப்பீர்கள்🙂.


Monday, September 5, 2022

சகி - புதிய நாவல் கிண்டிலில்

ஹலோ மக்களே!

“சகி” எனும் புதிய நாவல் ஒன்றை கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். சிறுகதையாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த கதைக்கரு இரண்டு வருடங்களாகக் காத்திருந்து இப்போது குறுநாவல் அளவில் எழுத  முடிந்தது மகிழ்ச்சி தான் என்றாலும் நீங்க படிச்சு சொல்லப் போற வார்த்தைகள்ல தான் அது நிறைவான திருப்தியா, நிறைவான சந்தோசமான்னு தெரிஞ்சுக்கணும். 

சிறிய கதை தான் இது. Simple yet delicate storyline. படிச்சுப் பாருங்க. Do read, review and share a word if you like the heart of the story. இந்நாவலை Pen to publish-ல் இணைத்துள்ளதால் உங்க ரேட்டிங்ஸ் அண்ட் ரிவியூஸை amazon.in இல் பதிவு பண்ண மறந்துடாதீங்க. Thanks everyone for your support!

https://www.amazon.in/dp/B0BD45MYYM

https://www.amazon.com/dp/B0BD45MYYM

#pentopublish5 tamil 

#சகி

Sunday, July 31, 2022

மிளிர் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். என்னுடைய புதிய நாவல் ‘மிளிர்’ கடந்த மாதம் வெளியாகியுள்ளது. 


பெண் விழை - சிறுகதை

பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் என்னுடைய சிறுகதையான ‘பெண் விழை’ யும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அனலாத்தி - சிறுகதை

ஜூன் 2022 தென்றல் இதழில் என்னுடைய சிறுகதை 'அனலாத்தி' வெளியாகியுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிறுகதைக்கான இணைப்பு இங்கே - 

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=15105


Saturday, June 18, 2022

பெண்மணி நாவல்

இந்த மாதப் பெண்மணி இதழில் என்னுடைய நாவல் வெளியாகி உள்ளது. 'துளிர்த்தெழும் தளிர்கள்' என்ற பெயர் 'ஆனந்தம் விளையாடும் வீடு' -ஆக வெளிவநதுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தால் மகிழ்வேன்! 🙂




Tuesday, January 4, 2022

மனங்கொத்திப் பறவை - புத்தக வெளியீடு

அன்பு நண்பர்களுக்கு,

"மனங்கொத்திப் பறவை" நாவல் புத்தகமாக வெளி வந்துள்ளதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகத்தினருக்கும், ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

வலைத்தமிழ் நிகழ்வில்

வலைத்தமிழ் எழுத்தாளர்கள் கூடல் நிகழ்வின் காணொளிகளும், என்னுடைய சிறு அறிமுகமும்  -