"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label யாழினிது. Show all posts
Showing posts with label யாழினிது. Show all posts

Friday, July 7, 2023

யாழினிது - Reviews



யாழினிது | Yaazhinidhu (Tamil Edition) eBook : Jay, Hema : Amazon.in: Kindle Store

Mr. Muthu Yuraraj - Apr 18, 2023

அருமையான நாவல். நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். தன் தந்தையின் மீது வெறுப்பையே காட்டி வந்த சக்தி படிப்படியாய் அவரை நெருங்கி பாசத்தைப் பொழியும் மகளாய் மாறுவதை இயல்பாய் காட்டியுள்ளீர்கள். நாவலை படித்து முடிக்கும்போது எவர் கண்களும் பனிக்கும். நாவலில் ஆங்காங்கே வரும் மருத்துவ விஷயங்களில் தங்களின் உழைப்பு மிளிர்கிறது. முதல் பரிசு பெற தகுதியான படைப்பு. வாழ்த்துகள்.

Ms. Alamu Palaniappan Apr 13, 2023

" யாழினிது "

ஹேமா ஜெய்
தலைபிற்கான காரணத்தை கதை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து யோசிக்கிறேன். பல அர்த்தங்கள் தருகிறது.
" மனிதம் " பேசும் மற்றுமொரு படைப்பு. துரோகத்தின் வலி தாங்க இயலாதது. அதைத்தாங்கி, உயர்ந்த சக்தியின் வாழ்க்கையில் தந்தை ஆர்கே வரவால் என்ன நடந்தது ? என்பதை மெல்லிய காதல் இழையோட சொல்வியிருக்கிறீர்கள். அத்தனை மனிதர்களின் மனிதமும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
" இறைவா நீஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற"
மேலும் இது போல் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஹேமா.

Thursday, April 13, 2023

யாழினிது - கண்மணி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த வார கண்மணியில் (19-4-2023)-ல் ஆதித்தனார் நினைவு நாவல் பரிசு போட்டியில் பரிசு பெற்ற 'யாழினிது' வெளியாகியுள்ளது. மிக மிக மகிழ்ச்சியான தருணம்🙂🙂



Wednesday, September 7, 2022

தேவியின் கண்மணி நாவல் போட்டி

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

தேவியின் கண்மணி நாவல் போட்டியில் என்னுடைய நாவலான ‘யாழினிது’ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எங்கும் நிறை பேரருளின் கருணைக்கு நன்றி!

இந்தக் கதையில் சூட்சமமாக இடம்பெற்ற, வாழ்க்கையைத் துய்த்து வாழ்ந்த என் அலுவலக நண்பர் பிரையனை இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்கிறேன். அவரோ, அவருடைய வாழ்க்கையோ இந்நாவலில் இல்லை. எனினும் அவருடைய விடாமுயற்சியின் சுவடுகள் எத்தனை கனமாக என்னுள் ஊடுருவியுள்ளது என்பதை இக்கதையை எழுதும்போது தான் நானும் உணர்ந்தேன். இப்போது நீங்கள் இருந்திருந்தால் உங்களிடம் தான் இதை முதலில் சொல்லியிருப்பேன் பிரையன். இது என்ன போட்டி என்று ஒரு மணி நேரம் நகர விடாமல் நீங்களும் என்னை துளைத்திருந்திருப்பீர்கள்🙂.