Mr. Muthu Yuraraj - Apr 18, 2023
அருமையான நாவல். நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். தன் தந்தையின் மீது வெறுப்பையே காட்டி வந்த சக்தி படிப்படியாய் அவரை நெருங்கி பாசத்தைப் பொழியும் மகளாய் மாறுவதை இயல்பாய் காட்டியுள்ளீர்கள். நாவலை படித்து முடிக்கும்போது எவர் கண்களும் பனிக்கும். நாவலில் ஆங்காங்கே வரும் மருத்துவ விஷயங்களில் தங்களின் உழைப்பு மிளிர்கிறது. முதல் பரிசு பெற தகுதியான படைப்பு. வாழ்த்துகள்.
Ms. Alamu Palaniappan Apr 13, 2023
" யாழினிது "
ஹேமா ஜெய்
தலைபிற்கான காரணத்தை கதை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து யோசிக்கிறேன். பல அர்த்தங்கள் தருகிறது.
" மனிதம் " பேசும் மற்றுமொரு படைப்பு. துரோகத்தின் வலி தாங்க இயலாதது. அதைத்தாங்கி, உயர்ந்த சக்தியின் வாழ்க்கையில் தந்தை ஆர்கே வரவால் என்ன நடந்தது ? என்பதை மெல்லிய காதல் இழையோட சொல்வியிருக்கிறீர்கள். அத்தனை மனிதர்களின் மனிதமும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
" இறைவா நீஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற"
மேலும் இது போல் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஹேமா.