"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label கண்மணி நாவல். Show all posts
Showing posts with label கண்மணி நாவல். Show all posts

Thursday, June 27, 2024

பனியுதிர்காலம் - கண்மணி நாவல்

ஹாய் மக்களே, இந்த வார கண்மணியில் எனது நாவல் 'பனியுதிர்காலம்' வெளி வந்துள்ளது.






அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெளிச்சமெனத் தெரியும் அமெரிக்க வாழ்க்கையின் இருண்ட மூலைகளையும் தொட்டுச் செல்ல முனைகிறது. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை இணைத்துச் செல்லும் நெடுஞ்சாலை I15 தான் கதையின் களம். பனியுதிர்காலத்தில் நிகழும் இக்கதைக்கு நான் வைத்த பெயர் 'I15 - பனியுதிர்காலம்' 🙂

குறுநாவல் பாணியில் விரைவில் வாசித்து விடலாம். வாய்ப்புள்ளவர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். புத்தக அட்டையை இன்று காலை பாரதி பகிர்ந்தபோது அடைந்த மகிழ்வு வாசகர்கள் நீங்கள் வாசித்து சொல்லும்போது இரட்டிப்பாகும். 🙂 🙂 நன்றி! நன்றி!