"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, November 12, 2016

நாசி சூழ் உலகு


கடைக்குள் நுழைந்த அறிவு மீண்டும் ஒருமுறை தன் சட்டையையும் பேண்ட்டையும் குனிந்து பார்த்துக் கொண்டான். இருப்பதிலேயே நல்ல உருப்படி, நேற்றிரவே மடித்து தலையணைக்கடியில் வைத்தெடுத்ததால் அந்த இளபச்சை சட்டையும் க்ரேநிற பேண்ட்டும் படிமானமாக தனக்கு பொருந்தியிருப்பதாகத்தான் தோன்றியது. முடியை கோதிக்கொண்டு எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னுருவத்தை மீண்டுமொருமுறை பார்த்தவன், திருப்தியுடன் கைமடிப்பை சரி செய்து கொண்டான்.

Tuesday, November 1, 2016

அப்பாவின் நிழல்

குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியை சூழ்ந்துக்கொண்டன. நெய்யில் முந்திரி திராட்சை வறுபடும் மணமும், முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும், ஏதோ ஒரு காய் எண்ணைய்சட்டியில் ரோஸ்டாகும் காந்தல்மணமும்....

மூக்கை இழுத்து அவற்றை அனுபவித்துக்கொண்டே மீனு எல்லாம் ரெடி ஆயிடுச்சா...? நேரம் ஆகிட்டே இருக்கு...பாரு” கேசத்திலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையையும் முகத்தையும் துடைத்தபடி சமையலறை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தேன்.