"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, April 22, 2024

அன்பான அதிதிக்கு - Reviews

Ms. Azhagi Nov 19 2023

அன்பான அதிதிக்கு...
Hema Jay
நீண்ட நாட்களாக உங்கள் கதையைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியது மேம். உங்கள் எழுத்தை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு அறிவும், அனுபவமும் கிடையாது. அப்போ எதுக்கு இந்த விமர்சனம்னு கேட்கிறீங்களா? ஒரு நல்ல படைப்பைப் படித்துவிட்டு மௌனமாகக் கடந்து செல்ல முடியவில்லை.
ஆதி, அதிதி... இரு துருவங்கள். அந்த இரு துருவங்களையும் எத்தனை அழகாக ஒன்றுசேர்த்து வைத்திருக்கிறீர்கள்!
அழகாகக் கால் நீட்டி, கையைத் தலையணையாக்கி, டைப் பண்ண வேண்டுமே என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் உங்கள் எழுத்தைப் படிப்பது அத்தனை சுகமாக இருந்தது.
அதிதி போல நான்கு பேர் ஒவ்வொரு ஊரிலும் இருந்தால் நாடே திருந்திவிடும் என்று தோன்றுகிறது.
இயந்திரத்தனமான ஆதி இறுதியில் இப்படி இளகிப்போனானே என்றிருந்தது. அருமை. கடைசி அத்தியாயங்கள் மிகவும் இனிமை. ஆதிக்கும் ரொமான்ஸ் வருகிறதே!
மிக்க மகிழ்ச்சி.
ஒரு நல்ல படைப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி.
அன்புடன் அழகி.⚘
All reactions:
Amirtha, Chitrasaraswathi and 7 others



Ms. Divya Sivakumar Nov 19 2023

அன்பான ஹேமாவுக்கு,,,

உங்கள் எழுத்துக்கு ஆயிரம் அன்பான முத்தங்கள்..❤️😘😘
வேற என்ன சொல்ல,எதை சொன்னாலும் அது ஈடாகாது...
ஒவ்வொரு கதைலயும் ஒவ்வொரு விதமான ஜோனரை தொட்டு,என் பார்வை வட்டத்தை விரிவடைய வைக்கரீங்க..
Thanks for that...❤️❤️

Ms. Selvarani Nov 1 2023

அன்பான அதிதிக்கு.
மனதை கொள்ளையடிக்கும் எழுத்து ❤️.
மெல்லிய நுண்ணுணர்வுகளை நம்முள் கடத்தும் கதை.அதிதி அழகான தேவதை.ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரேக் எடுத்தால் தான் வாழ்வின் அழகியல் புரியும்.அம்மா தானே அப்பா தானே.எங்கே போய் விடப் போகிறார்கள்?அவர்களுக்கு வேறு வேலை இல்லை.எப்போ பார்,சாப்பிட்டியா தூங்கினியான்னு!
ஆதியின் பரபரப்பான வாழ்வில் ஒரு திருப்பம்.அம்மாவின் மொட்டையில் எனக்கும் கண் கலங்கிவிட்டதே! பக்கத்தில் இருக்கும் வைரங்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.அப்படி வைரத்தை கண்டு பிடிக்கிறான் ஆதி.
ஒரு தற்கொலையை கடக்க உதவும் தேவதைகள் நம்மை சுற்றி இருக்கிறார்கள்.அவர்களைக் கொண்டாடுவோம்.
All reactions:
Selvarani, Suresh and 4 others



Ms. Kokila Balraj Nov 1 2023

அன்பான அதிதிக்கு

Hema Jay
ஆதன் இன்றைய IT இளைஞன்
வேலை, வேலை மட்டுமே
உறவுகள், உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன்
அதிதி மனிதர்களை அவர்களின் உணர்வுகளை மதிப்பவள், அதற்கேற்ற பணி
இருவரின் பெற்றோர்கள், அவர்களின் பின்னணியும், பிணைப்பும்...
எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள் இணைவதை அழகாக எடுத்து சென்ற விதம் அருமை
ஆதனின் மாற்றம் இயல்பாக இருந்தது சிறப்பு
ஆதன் ரொம்ப ரசிக்க வச்சா ன்
அவன் எழுதிய லெட்டர்ஸ் 🤩🤩🤩🤩🤩
Data Science material ah போய் love letter எழுத சொன்னா...
Enjoyed a lot
Congrats 💐💐💐💐💐

Ms. Bhuvana Suresh Nov 23 2023

அன்பான அதிதி. உங்க எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை. கதை முழுக்க அப்படி ஒரு பாசிட்டிவ் வைப். கூடவேயிருக்கரவங்கள நாம எப்பவுமே கண்டுக்க மாட்டோம். அதுவும் அம்மான்னா கேக்கவே வேணாம். நம்ம அம்மாதான! அவங்களோட கடமை நம்மள பார்த்துக்கறதுன்னு ஒரு மைண்ட் செட் . அப்படி ஒரு உறவு இல்லாதப்பதான் நமக்கு அவங்க அருமை தெரியும்.. இது எல்லா உறவுக்கு மே பொருந்தும்‌. அதிதி பேசுற விஷயங்கள் எல்லாமுமே நூற்றுக்கு நூறு சரி. அதிதி உண்மையில் தேவதையே. தான் சந்திக்கும் எல்லா மனிதர்களிடமும் அன்பபையும் ஆதரவையும் கொடுப்பது போல் படித்த என் மனதிலும் பாசிட்டிவ் வைப். வாழ்த்துக்கள் சகி. தாங்கள் யூ அமிர்தா அக்கா. உங்க போஸ்ட் பார்த்த தான் படிக்க ஆரம்பிச்சேன். ஒரு நல்ல கதையை சொன்னதுக்கு‌.


Ms. Anandha Jothi Nov 19 2023

படைப்பு : அன்பான அதிதிக்கு
எழுத்தாளர் : ஹேமா ஜெய் (KKP - 39)
வெளியீடு : கனா காணும் பேனாக்கள் 2023
வைகை தளம்
அத்தியாய அளவு : 27
கதைக்கானலிங்: https://vaigaitamilnovels.com/.../kkp39-%E0%AE%85%E0.../...
ஆதன் & அதிதி :
வெற்றி என்பதை குறிக்கோளாக கொண்டு மேலும், உயர்ந்த நிலையை அடைய எண்ணும் நாயகன், அதில் தான் செய்த தவறுகள், அடுத்தவர் மனநிலை, பெற்றோரின் தன் மீதான பாசம், தோழியின் அன்பான பேச்சுக்கள் எதையும் செவி சாய்க்காமல் உயர்ந்த பதவியை மட்டுமே அடைய வேண்டும் என்பதிலே தீவிரமாக கவனத்தைப் பதித்து, தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டுகிறான். அப்படிப்பட்டவன் சற்றும் எதிர்பாராத விதமாக வாழ்க்கையில் சந்தித்த மிகப் பெரும் தோல்வியால் அடைகின்ற மாற்றம், அதற்குப் பிறகான அவனது வாழ்வியல் மாறுபாடுகள், மனநிலைகளை பற்றி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக சொல்லியிருக்காங்க.
அலுவலகத்தில் பணிபுரியும் பலரை வேலை நீக்கம் செய்யும் போது அவனது பேச்சும், பெற்றோரிடம் நடந்து கொண்ட முறையிலும் அவனது சுயநலம் அப்பட்டமாக தெரிகிறது. யார் எப்படி போனால் எனக்கு என்ன? என்பது போல், (ஆனால் நான்... அவன் உயர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட மேலாளர்களை ஏதாவது செய்யக் கூடும்.. அல்லது, வேலை இழந்து அவதியுறும் மக்களுக்கு ஏதேனும் உதவி, மறுபடியும் பணியில் அமர்த்தி வைக்க கூடுமோ இல்லை, அவனுக்கும் இதே கதிதானோ என்று நினைத்தேன்.)
வெற்றியை மட்டுமே ருசித்த நாயகன், முதன் முதலாக வாழ்க்கையில் எதிர் கொண்ட தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் எடுத்த முடிவும், அதற்குப் பிறகான அவனது மாற்றமும்👌👌👌 ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. 'தத்தி தத்தி ' என்றவன் நிலமை இறுதியில்🤭🤭
அதிதி :
எழிமையும், அடக்கமும், சமூக அக்கறையும் கூடிய அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் பெண். தகப்பனாரிடம் காட்டிய பாசமும், நண்பனின் பெற்றோரிடம் காட்டிய அக்கறையும், நண்பனை அப்படி ஒரு நிலையில் காண முடியாமல் வெம்பி, கொதித்து, சத்தமிடுவதிலும் 👏👏👏 பிரமாதமாக செயல்படுகிறார்.
அவனை மட்டுமல்ல இன்னும் பலரையும் கவுன்சிலிங் மூலம் மனதில் உள்ள இறுக்கத்தை கழைய செய்து, அவர்களை மறுபடியும் புத்துயிர் பெற உதவி செய்த இடங்கள் வெகுசிறப்பு.
அவளது தாய் மீதான பாசமும், அவரது இறப்பும், அதை நினைத்து அவள் ஏங்கும் இடமும், கோப்பட்டு கத்தும் இடமும் அவளது ஏக்கத்தை அப்பட்டமாக உரைத்தது.
அர்ச்சனா & சிவம் அருமையான பெற்றோர். மகன் மீதான பாசத்தில் அவனுக்கு பிடித்த உணவுகளை செய்து வைப்பதும், அவனது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதும், மகனுக்கு நேர்த்திக் கடனாக முடியை காணிக்கை செலுத்துவதும் என மனதைக் கவர்ந்த பாத்திரங்கள்.
கணேஷன் மகளுக்காகவே வாழும் ஒரு உன்னத மனிதன். மகளுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டாரின் பேச்சைக் கேட்டு கலங்கிய இடம், நிஜமான சம்பவத்தை கண் முன் கொண்டு வந்தது.
தொடர்கதை வாசிக்க ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது. டெரராக வந்து பிறர் மனதை புரிந்து கொள்ளாமல் மிடுக்காக இருக்கின்ற நாயகன், எப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னையும், தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களை உணர்கிறான். 'வெற்றியை மட்டுமே எதிர்நோக்கி செல்ல கற்றுக் கொடுக்கும் பெற்றோர், அவர்களிடம் தோல்வியை தாங்கும் மனப்பக்குவத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதை புரியும் விதமாக தெளிவாக கூறியிருக்கும் எழுத்தாளருக்கு என்னுடைய பாராட்டுகள்.
மேலும், நிறைய எழுதவும் விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐
kkp39-அன்பான அதிதிக்கு ( மருத்துவம்)

Ms. Chitra saraswathi Nov 19 2023
வைகை தளத்தின் போட்டிக் கதை நட்சத்திர எழுத்தாளர்களின் கதை ஹேமா ஜெய் யின் அன்பான அதிதிக்கு எனது பார்வையில். அதிதி உளவியலில் சிறந்து மனநலம் காக்கும் பணியில் இருப்பவள். அம்மாவை இழந்து ஆசிரியரான அப்பாவுடன் ஒரே மகளாக இருப்பவள். பக்கத்து வீட்டில் அவள் அப்பாவுடன் பணியில் இருக்கும் சிவம் அவர் மனைவி அர்ச்சனா அவர்களின் ஒரே மகன் ஆதன் மென்பொருள் துறையில் உயரிய பணியில் இருப்பவன். ஆதன் படித்த பள்ளியில் இருந்து எதிலும் முதலிடம் பெற்று பணியிலும் சிறிய வயதில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறான். ஆதன் எதிலும் பணத்தையும் பதவியையும் கொண்டு வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கும் மனநிலையில் இருப்பவன். இவன் மூலம் தோல்வியை சந்திக்கவும் அதை எதிர்கொள்ளவும் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சொல்வது தற்கால இளைய சமூகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. தனக்காகவே வாழும் அப்பாவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மருத்துவமனையில் பணியில் இருப்பவள். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான மனதைரியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவள். பணத்தைவிட அன்பும் அரவணைப்பும் வாழ்க்கைக்கு தேவையானவை என்று நினைக்கும் அதிதியின் ரசிகர்களாக நம்மை மாற்றுகிறாள். ஆதன் செய்த பணிகள் மற்றும் அவன் சந்திக்கும் நிகழ்வு தற்போதைய சூழலில் பலரும் சந்தித்து மீண்டவர்கள் பலர். திலீப் போன்றவர்கள் குறைவான சதவீதமே உள்ளனர். இரு துருவங்களாக இருக்கும் இருவரை இணைப்பது கார்ப்பரேட் என்ற பெருநிறுவனத்தின் கொள்கைதான். அழகான உளவியல் ரீதியான கதையை இயல்பாக தந்திருக்கும் ஹேமாவிற்கு வாழ்த்துகள். இவரின் எழுத்தில் நான் படிக்கும் மூன்றாவது கதை இது.

Ms. Amirtha Seshadri Nov 17 2023

Just one word review for அன்பான அதிதி
Wow!! Wow!
தேவி- அதிதி கான்வோல வருவது சில தருணங்கள் பேச்சுக்கானவை இல்லை என்பது போல சில கதைகள் விமர்சனங்களை கடந்த ஒரு நிலை.
SS எடுக்கனும்ன பக்கத்துக்கு ஒன்னு எடுக்கனும். அதான் விட்டுட்டேன்.
புக் போடும்போது எனக்கு ஒரு free copy தரணும். இப்பவே சொல்லிட்டேன்..
All reactions:
You, Chitrasaraswathi, Divya Sivakumar and 16 others

Ms.ApsareezBeena Loganathan Nov 21 2023

🙂 🙏
KKP39 : அன்பான அதிதிக்கு (மருத்துவம்)
ஆசிரியர்: ஹேமா ஜெய்
மனிதர்களின் மனங்களை புரிந்து கொண்டு
மனம் நோகாமல் வாழும் மங்கை அதிதி
கணேசனின் செல்ல மகள்...
மற்றவரை பற்றி கவலை கொள்ளாமல்
வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
தனக்கென ஒரு கோட்பாடு கொண்டு
தன் சுகமே என வாழும் ஆதன்....
சிவம் அர்ச்சனாவின் செல்ல மகன்.....
ஆதன் முதன்மையானவன் எதிலும் முதன்மையானவனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் ஆதனின் முதல் காதல் தோல்வியில்
இருக்க.....
அதித்தியின் திருமணம் தள்ளிக்கொண்டே செல்ல அன்னையின் பின்புலமே எனத் தெரிந்து
கலங்கி நிற்கும் அன்பு மகள்....
கணேசன் சிவம் இருவரும் பக்கத்து பக்கத்து வீடு பாலிய நண்பர்கள் என இரு குடும்பமும்
இருவர் குடும்பத்தைப் பற்றியும் தெரிந்து
புரிந்து நட்புடன் வாழும் குடும்பங்கள்....
ஆதனும் அதித்தியும் அவ்வாறே நட்புடன் இருக்க ....
அன்னையை காரணம் காட்டி அதிதியின் திருமணம் நிற்க
அன்னை பற்றிய காரணம் என்ன
ஆதனின் காதல் தோல்வி அடுத்து என்ன என
அனைத்தையும்
தெரிந்து கொள்ள
படிக்கவும்
அன்பான அதிதிக்கு.....
ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என்னை அனுப்பினேன்.....
காதலி என்னை காதலி....
அழகான கவிதையோ அற்புதமான வர்ணனைகளோ ஆர்ப்பாட்டமான வார்த்தைகளோ இல்லாத ஆழ் மனதில் நானாய் தோன்றும் அப்பட்டமான உண்மையே அழகு....
உன்னை நேசி.....அதுவே
உன்னதமான அன்பு....
எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடும் மனங்களின் நேர்மறையான கருத்துக்களை கொண்டு நிதர்சனத்தை உணர்த்தும் நம்பிக்கையான வார்த்தைகளாய் அதிதி....
அருமையோ அருமை...
நன்றிகளும்
வாழ்த்துக்களும் சகி....💐💐💐💐
All reactions:
ஆனந்த, Suresh and 9 others



Ms. Shanthi Nov 17 2023

மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்களை போக்கி ஒரு தெளிவை கொடுக்கும் அருமையான கதை.
இப்படி ஒரு கதை கருவி தெரிந்தெடுத்து ரைட் இருக்கு என்னுடைய பெரிய பெரிய பாராட்டுக்கள் 💐💐💐
வாழ்க்கையிலே வெற்றியை மட்டுமே எதிர்கொண்டு மனதில் கர்வத்துடன் இருப்பவர்களும், அழகு நிறம் போன்றவற்றில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் முதல் சறுக்கள்களின் பொது அவர்களின் மன மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை கதையில் ரொம்ப அருமையா எடுத்து சொல்லியிருக்காங்க ரைட்டர் 👏👏👏
அதிதி சச் எ பியூட்டிஃபுல் கேரக்டர் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சி இருந்தது😍😍😍
. ஒரு மனநல ஆலோசகரா இவளோட பொறுமையும், அறிவுரைகளும் தன்னிடம் வருபவர்களை கையாலும் விதமும் ரொம்ப ரொம்ப அருமை.
ஆதன் வெற்றியை மட்டுமே சந்தித்து தாய் தந்தையிடமும் நின்று பேச நேரமில்லாமல் வேலையின் பின்னாடியும் பதவியும் பின்னாடியும் இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருப்பவன் . இவனோட முதல் சறுக்களின் போது இவனுடைய மனநிலை அதை ஏற்க மறுத்து அவன் செய்யும் செயலும், வேலையின் போது தன்னை சுற்றி உள்ளவர்களின் மீது இவன் அலட்சியமும் இவன் மீது சம்ம கோவம் வர வைக்கிறது 😡😡😡
கணேசன் ரொம்ப அருமையான அப்பா அதிதியோட மனசு புரிஞ்சுகிட்டு அவளுக்காகவே வாழும் தாயுமானவராய் இவரு மனசுல இடம் பிடிக்காது 😍😍😍
சிவம் அர்ச்சனா ரொம்ப அன்பான அப்பா அம்மா ஆனா ரொம்ப வெகுளியானவங்க. மகனின் மீது அளவு கடந்த பாசம் வச்சவங்க அவன் தங்களை அலட்சியப்படுத்தினாலும் இவங்க விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது சூப்பர் 👌👌👌
தேவி பிரவீன் இவங்களோட மாற்றம் ரொம்ப அருமையா இருந்தது 👏👏
மேகலா மேல நிஜமா கோபம் தான் வந்துச்சு அடுத்தவங்க பேசறதை கேட்டுகிட்டு பெத்த மகளையும் உயிரான கணவனையும் விட்டுட்டு போனது சுத்தமா பிடிக்கல. அதுவும் ஏதாவது ஒரு கோவத்துல அவசரத்தில் எடுத்துட்டு இருந்தாலும் தெரிஞ்சிருக்காது நல்லா பிளான் பண்ணி குழந்தைக்கு சாப்பாடு எல்லாம் எடுத்து பக்கத்து வீட்டுல கொடுத்து கதவை உடைக்காத மாதிரி முட்டுக்கொடுத்து எவ்வளவோ யோசிச்ச அவங்க அடுத்தவங்களை நாம நினைக்கணும் அவங்க என்ன பேசினா என்ன நம்ம குழந்தையும் கணவனையும் நம்ம குடும்பத்தையும் பார்க்காலம்னு நினைத்திருந்தால் அப்படி ஒரு தப்பான முடிவு எடுத்து இருக்க மாட்டாங்க
ஆதனிடம் வந்த மாற்றங்களும் அவன் மைன்ட் வாய்ஸ்லாம் ரொம்ப அருமை அதுலயும் அவனுடைய காதல் கடிதம் ரொம்ப ரொம்ப சூப்பர் 🤩🤩🤩
வாழ்க்கையில் வெற்றி மட்டுமே எதிர்பார்க்காமல் சின்ன Using தோல்விகளையும் கடந்து வர நம் குழந்தைகளை மனதை பக்குவப்படுத்த வேண்டும். எல்லாருமே முதல் மதிப்பெண் எடுக்கணும் டாக்டர் இன்ஜினியர் தான் ஆகணும்னு நினைச்சா அப்போ அடுத்து அடுத்து இருக்கிற நர்ஸ்,கம்பவுண்டர், வார்ட் பாய், இப்படிப்பட்ட வேலைகள் எல்லாம் யார் பாக்குறது அடுத்தவங்க அழகா இருக்காங்க நல்லா படிக்கிறாங்க சம்பாதிக்கிறாங்கன்னு அடுத்தவங்களையும் நினைக்காம நமக்கு என்ன வரும் நமக்குள்ள இருக்கும் தனித்திறமை என்னென்ன கண்டுபிடித்து நம் மனதில் என்ன படி வாழ்ந்தாலே தாழ்வு மனப்பான்மை என்றால் என்ன நமக்குள்ள வராது
நல்ல சமூக சிந்தனையுடைய ரொம்ப ரொம்ப அருமையான கதை.
வாழ்த்துக்கள் 💐💐

 

Ms. Mithra Bharani Oct 29 2023

அன்பான அதிதிக்கு ❤
ஒரு வெறுமையான ஞாயிற்றுக் கிழமையை அழகாக மாற்றிவிட்டது. அதைவிட முக்கியமாக ஆதனைப் போலவே இயந்திர வாழ்க்கையில் சுழன்று கொண்டிருந்தவளுக்குத் தேவையான இளைப்பாறலை கொடுத்திருக்கிறது.
அடுத்த அத்தியாயங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சிஸ் Hema Jay
All reactions:
You, Narmadha, Jaanu and 5 others

Ms. Thoorika Saravanan Dec 3 2023

அன்பான அதிதிக்கு!
ஆசிரியர் Hema Jay
ஆதன், அதிதி
அருகருகே இருக்கும் வீட்டில் வளரும் நண்பர்கள். எதிலும் முதல் என்று ஓட்ட போட்டியை போல் வாழ்க்கை போட்டியிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் ஆதன். மனத்தின் நிறைவே முக்கியம். முதலாக வருவதோ பணம் சம்பாதிப்பதோ பெரிதல்ல என்று நினைக்கும் அதிதி.
நல்ல நண்பர்களாக இருந்தாலும் மண வாழ்க்கையில் தனித்தனி பாதையில் செல்லும் இருவரின் பாதைகளும் எப்போது இணைகிறது?
படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கார்ப்பரேட் வேலையில் சந்திக்க கூடிய பிரச்சனைகளை ஆதனின் வாழ்க்கை முறை மூலம் அழகாக எடுத்து சொல்லும் அதே நேரம் எந்த எந்த விஷயங்களில் மக்கள் மன நலன் பாதிக்கபட்டு psychological counselling வருகிறார்கள் என்பதை அதிதியின் மூலம் எடுத்து சொல்கிறார். 👍👍👍
இரண்டுமே கதையோட்டத்தோடு இணைந்து கூறப்படுவது சிறப்பு.👌👌👌
ஆரம்பம் முதல் தெளிவாக தனக்கு என்ன வேண்டும் என்று சிந்திக்கும் அதிதியை போலவே தனக்கு இது ஒத்து வராது என முடிவெடுக்கும் மானஸ்வினியையும் பிடித்தது எனக்கு. நிஜமாகவே இந்த காலத்து பிள்ளைகள் வெகு தெளிவு. 😍😍😍
ஆதனும் முதலில் கானல் நீரை துரத்தி கொண்டு ஓடினாலும் தன் கங்கை எது என்பதை இறுதியில் புரிந்து கொள்கிறான்.அதுவும் கடைசி சில அத்தியாயங்களில் அவன் lover boy அவதாரம் so cute.🩷🩷🩷
எப்போதும் போலவே எழுத்தாளரின் பொங்கி வரும் எழுத்து நடையில் என்னை மறந்து மூழ்கி போனேன்.🥰🥰🥰
மேலும் இது போன்ற சிறந்த படைப்புகள் படைத்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகள் ஹேமா sis💐💐💐