"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label Kindle publication. Show all posts
Showing posts with label Kindle publication. Show all posts

Tuesday, November 5, 2024

அடி பெண்ணே! - Kindle Release

 ஹாய் டியர்ஸ்,

வாசகர்கள் நீங்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘அடி பெண்ணே!’ இப்போது கிண்டிலில் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய நட்புகள் கிண்டலில் பதிவேற்றம் செய்வது குறித்து நினைவூட்டிக் கொண்டே இருந்தீர்கள். நன்றிப்பா. இல்லை இன்னும் நாள் எடுத்திருப்பேன்.



வாசித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் நன்றி!

Tuesday, August 6, 2024

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

I15 பனியுதிர்காலம் இப்போது கிண்டிலில். 03 ஜூலை 2024 கண்மணியில் வெளிவந்த நாவல் இது. குறுநாவல் பாணியில் விரைவில் வாசித்து விடலாம். வாசகர்கள் வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். நன்றி!


அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேருந்து ஒன்றில் தொடங்கும் இக்கதை இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் நடப்பது. எதிர்பாராத ரீதியில் ஒரு இரவையும் பகலையும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்ளும் இளைஞனும் யுவதியும் தத்தம் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் மெல்ல அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சுவாரஸ்யமான அவர்களின் மறுபக்கம் வெளியே வெளிச்சமெனத் தெரியும் அமெரிக்க வாழ்க்கையின் இருண்ட மூலைகளையும் தொட்டுச் செல்ல முனைகிறது. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களை இணைத்துச் செல்லும் நெடுஞ்சாலை I15 தான் கதையின் களம். பனியுதிர்காலத்தில் நாமும் இவர்களுடன் இணைந்து கொள்வோமா? வாருங்கள். பயணிப்போம்.


https://www.amazon.in/dp/B0DCBPWS9P


https://www.amazon.com/dp/B0DCBPWS9P


Friday, April 19, 2024

அன்பான அதிதிக்கு | Anbana Adhithikku - Kindle Publication

ஹாய்,

உங்கள் பெரும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற 'அன்பான அதிதிக்கு' இப்போது கிண்டிலில். நண்பர்கள் வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி !


நாவலின் முன்னுரையில் இருந்து -
‘அன்பான அதிதிக்கு’ வாயிலாக நீங்கள் சந்திக்க இருக்கும் ஆதனும் அதிதியும் எதிரெதிர் துருவங்களில் நின்றிருப்பவர்கள். ஆதன் இன்றைய போட்டி யுகத்தின் பிரதிபலிப்பு எனில் அதிதி அன்பின் சங்கமம்.
சிலநேரம் வேகத்தடைகள் தான் வாழ்வின் பொருளை உணர்த்துகின்றன, அல்லவா!? வெற்றி மனிதனுக்கு அங்கீகாரம் தந்து அவனுடைய செயல் வல்லமை குறித்து அவனுக்கே நம்பிக்கை அளிக்கிறது என்றால் சரிவு அவனுடைய கால்கள் தரையில் தான் ஊன்றியுள்ளனவா என்று பரிசோதிக்கின்றன.
---
அன்புடன்,
ஹேமா ஜெய்
No photo description available.

All reaction

Wednesday, March 22, 2023

'மலரவிழ்' நாவல் - கிண்டிலில்

டியர் மக்களே,

'மலரவிழ்' நாவல் இப்போது கிண்டிலில்.
Enjoy reading!🙂 Do share a word if you like the heart of the story.💕
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -
ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்பதும் உண்டு. அது அவற்றின் குற்றமல்ல. அக செழிப்பையும் தாண்டி சூழலும், புற காரணிகளும் தானே ஒவ்வொரு மலரின் மலர்வையும் தீர்மானிக்கின்றன. அப்படிக் கூம்பி கிடக்கும் சில மலர்களின் விழிப்பையும், இதழ்விரிப்பையும் சொல்லும் கதை தான் “மலரவிழ்”.

மலரவிழ் | Malaravizh (Tamil Edition)
இக்கதையில் உலா வரும் மனிதர்களை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். ஜேனும் அரவிந்தனும் நாம் அறியாதவர்கள் அல்ல. இவர்களின் வாழ்க்கை இல்லாததை இருப்பதாகச் சித்தரிக்கும் கட்டுக்கதையும் அல்ல. இருவரின் வயதும், சூழலும், பின்புலமும், சிக்கல்களும் வெவ்வேறு தான் எனினும் அவர்களை அருகருகே கொண்டு வந்து நிறுத்தும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் ரணத்தையும், அனுபவங்களையும் படிப்பினைகளையும் பகிரும் நோக்கமே இவ்வெழுத்திற்கான வித்து. “மலரவிழ்” குறித்த தங்களின் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். உங்களது ஆதரவுக்கும் மதிப்புமிகு விமர்சனங்களுக்கும் எனது நன்றிகள் பல!🙂💕

Monday, November 21, 2022

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில்

டியர் மக்களே,

'மிளிர்' நாவல் இப்போது கிண்டிலில். கடந்த ஜூன் 2022-ல் புத்தகமாக வெளிவந்தது இப்போது கிண்டில் பதிப்பாக உங்கள் முன்பு. Do read, review and share a word if you like this story.